search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநின்றவூரில் தி.மு.க. கவுன்சிலர் மகனுக்கு வெட்டு
    X

    திருநின்றவூரில் தி.மு.க. கவுன்சிலர் மகனுக்கு வெட்டு

    • எங்கள் குடும்ப பிரச்சினை என்று கூறி அண்ணன் தம்பியான சுந்தரமூர்த்தி, சவுந்தரராஜன்ஆகிய இருவரும் கத்தியால் ராஜேஷ் தலையில் தாக்கினார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து சுந்தரமூர்த்தி, சவுந்தரராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

    ஆவடி:

    திருநின்றவூர் நடுகுத்தகை 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக நவமணி இருந்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் (வயது 34). இவர் நேற்று இரவு நடுகுத்தகை காந்தி நகர் அருகே அண்ணன்-தம்பி சண்டையை சமரசம் செய்ய முயன்றார். வாக்குவாதம் ஏற்பட்டு இது எங்கள் குடும்ப பிரச்சினை என்று கூறி அண்ணன் தம்பியான சுந்தரமூர்த்தி (வயது 25), சவுந்தரராஜன் (வயது 24) ஆகிய இருவரும் கத்தியால் ராஜேஷ் தலையில் தாக்கினார்.

    இதில் பலத்த காயம் ஏற்பட்ட ராஜேசை அருகில் உள்ளவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து சுந்தரமூர்த்தி, சவுந்தரராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

    Next Story
    ×