search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லிக்குப்பம்  பூலோகநாதர் கோவிலில் ஒரே நாளில்  சிவன், பெருமாளுக்கு திருக்கல்யாணம்:  திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் ஒரே மேடையில் பெருமாளுக்கும் ,சிவனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்ற காட்சி.

    நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் ஒரே நாளில் சிவன், பெருமாளுக்கு திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • பூலோகநாதர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்மகா தீபாராதனை நடைபெற்றது .
    • பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக 14- வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பூலோகநாதர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்மகா தீபாராதனை நடைபெற்றது .

    மாலை திருக்கல்யாண விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது . இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதிக்கும், புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் சாமிக்கும் ஒரே மேடையில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. பின்னர் பெருமாளுக்கும் தாயாருக்கும் மற்றும் சிவனுக்கும், அம்மனுக்கும் மங்கள வாத்தியத்துடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இங்கு பெருமாளுக்கும் மற்றும் சிவனுக்கும் ஒரே மேடையில் திருக்கல்யாணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு சுமங்கலி பிரசாதம் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகாதேவி மற்றும் பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் குமார், ஹரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×