திருச்செந்தூரில் 7-ம் திருவிழாவான இன்று திருக்கல்யாண உற்சவம்

சூரசம்ஹாரம் நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் செந்தில் குறவஞ்சி பாடல் பாடி வந்தனர்.
திருச்செந்தூரில் 7-ம் திருவிழாவான இன்று திருக்கல்யாண உற்சவம்
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந்தேதி யாகசாலை பூஜை யுடன் தொடங்கி நடை பெற்று வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

7-ம் திருவிழாவான இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது 3.30-க்கு விஸ்வ ரூப தரிசனம், 4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், காலை 6 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பட்டு சன்னதி தெரு, வீரராகவ புரம் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்குரதவீதி வழியாக தெப்பக்குளம் அருகே உள்ள தபசு மண்ட பத்திற்கு வந்து சேர்ந்தார்.

அப்போது அம்மன் சப்பரத்திற்கு முன்பு ராமையா பாகவதர் நினைவு நிலை செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், நிர்வாகி மற்றும் பக்தர்கள் செந்தில் குறவஞ்சி பாடல் பாடி வந்தனர்.

காலை 9 மணிக்கு உச்சி கால தீபாராதனை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

8-ம் திருவிழாவான நாளை இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், அம்பாள் பூம் பல்லக்கில் பட்டிண பிரவேசம் நடக்கிறது.

9,10,11 ஆகிய 3 திருவிழா நாட்களில் திருக்கல்யாண மேடை அருகில் ஊஞ்சல் வைபவமும் 12-ம் திருவிழா மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com