search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேய்பிறை அஷ்டமி; வடுக பைரவருக்கு சிறப்பு வழிபாடு
    X

    வடுக பைரவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தேய்பிறை அஷ்டமி; வடுக பைரவருக்கு சிறப்பு வழிபாடு

    • குழந்தை ரூபமாக காட்சி தரக்கூடிய வடுக பைரவர் தனி சன்னதியில் அருள்பாலிப்பு.
    • 96 வகையான ஹோமம், 9 வகையான நவதானியங்கள், பழவகைகள் உள்ளிட்டவை கொண்டு மகா யாகம்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த பனங்காடி ஊராட்சி வடுவகுடியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விசாலாட்சி அம்பிகா சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தில் குழந்தை ரூபமாக காட்சி தரக்கூடிய ஶ்ரீ வடுக பைரவர் தனி சன்னதியில் அமைத்து அருள்பாலிப்பது தனி சிறப்பாகும்.

    பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ரூத்ர யாகம் மற்றும் அஷ்டமி மகா யாகம் நடையைபெற்றது.

    முன்னதாக பால், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து 21 வகையான சமித்து மற்றும் 96 வகையான ஹோமம் திரவியங்கள், 9 வகையான நவ தாணிங்கள், பழவகைகள், பட்டு உள்ளிட்டன கொண்டு மகா யாகமும் தொடர்ந்து சிறப்பு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.

    மகா தீபாராதனைக்கு பின்னர் கடம் புறப்பாடாகி ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டது.

    பின்னர் கடத்து புனிதநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    Next Story
    ×