search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10 கிலோ கஞ்சாவுடன் வந்த வாலிபர் தப்பி ஓட்டம்
    X

    10 கிலோ கஞ்சாவுடன் வந்த வாலிபர் தப்பி ஓட்டம்

    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர்/ ரமேஷ் இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு வாலிபர் வந்து கொண்டிருந்தார்.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர்/ ரமேஷ் இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு வாலிபர் வந்து கொண்டிருந்தார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் அழைத்து விசாரிக்க முயன்ற போது, அந்த வாலிபர் பையை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த பையை காவல் நிலையம் எடுத்துச் சென்று சோதனை செய்ததில், அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அந்த கஞ்சா பையை போட்டுவிட்டு தப்பி ஓடிய வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×