search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வால்பாறை போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியுடன் தஞ்சம் அடைந்த வாலிபர்
    X

    வால்பாறை போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியுடன் தஞ்சம் அடைந்த வாலிபர்

    • காதல் விவகாரம் பிரியதர்ஷினியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • 2 பேரும் துடியலூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சோலையார் அணை அருகே உள்ள இடது கரையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21).

    இவர் திருப்பூரில் உள்ள பிரிண் டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மணிகண்டனுக்கு திருச்சூர் மாவட்டம் மளுக்கு பாறையை சேர்ந்த கல்லூரி மாணவி பிரியதர்ஷினி (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் பிரியதர்ஷினியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து அவர் தனது காதலனிடம் தெரிவித்தார்.

    எனவே 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி சம்பவத்தன்று 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் துடியலூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர்.

    திருமணம் முடிந்த கையோடு பிரியதர்ஷினியை, மணிகண்டன் தனது சொந்த ஊரான வால்பாறைக்கு அழைத்து சென்றார்.

    மகள் மாயமானது குறித்து மாணவியின் பெற்றோர் துடியலூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த காதலர்கள் பாதுகாப்பு கேட்டு ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×