search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மோதி அக்காள் கண் முன்னே இளம்பெண் பரிதாப சாவு
    X

    லாரி மோதி அக்காள் கண் முன்னே இளம்பெண் பரிதாப சாவு

    • சேலம்-கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயற்சித்த போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.
    • இதில், சாந்தி கண்ணெதிரே தங்கமணி சம்பவ இடத்தில் உடல்நசுங்கி பலியானார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், கொல்லப்பட்டி பகுதியில் வசிப்பவர் சாந்தி(வயது 42). டைலர். இவரது தங்கை தங்கமணி(38). இவர்கள் இருவரும் குமார பாளையம் வந்து விட்டு, ஊருக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றனர்.

    சேலம்-கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயற்சித்த போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், சாந்தி கண்ணெதிரே தங்கமணி சம்பவ இடத்தில் உடல்நசுங்கி பலியானார்.

    சாந்தி படுகாயங்களுடன் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×