search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடவள்ளி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
    X

    வடவள்ளி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

    • கார்த்திக் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.
    • வீட்டை விட்டு வெளியேறி நவாவூர் கோவிலில் திருமணம் செய்தனர்.

    கோவை,

    கோவை கணுவாய் அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது32).

    கார்த்திக் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கோகிலா(24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே காத லர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் நவாவூரில் உள்ள கோவிலில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்தனர். பின்னர் 2 பேரும் பாது காப்பு கேட்டு வடவள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 2 தரப்பு பெற்றோரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×