சாம்பவர்வடகரை 2-வது வார்டில் சேரும், சகதியாக மாறிய சாலை- பொது மக்கள் புகார்

புளியம்பட்டி தெருவில் சேரும் சகதியுமாக சாலைகளில் காட்சியளிக்கிறது.பள்ளி மாணவ-மாணவிகள் சாலையில் கடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.
சாலை முழுவதும் சகதியாக உள்ளதை படத்தில் காணலாம்.
சாலை முழுவதும் சகதியாக உள்ளதை படத்தில் காணலாம்.
Published on

சாம்பவர்வடகரை:

சாம்பார்வடகரை 2-வது வார்டு புளியம்பட்டி தெருவில் உள்ள பொதுமக்கள் சாம்பவர்வடகரை பேரூராட்சிக்கு புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரில் புளியம்பட்டி தெருவில் உள்ள அனைத்து வீடுகளில் உள்ள கழிவு நீர்களும் வாறுகால் வசதி பயனளிக்காமல் சேரும் சகதியுமாக சாலைகளில் காட்சியளிக்கிறது. இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் சாலையில் கடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லாததால் பொதுமக்கள் மீண்டும் புகார் அளித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com