search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடு விலை குறைந்தது
    X

    தருமபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடு விலை குறைந்தது

    • ரூ.492-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.44 விலை குறைந்தது.
    • மொத்தம் ரூ.11 லட்சத்து 67 ஆயிரத்து 812-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்ட ங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடு களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,117 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3,193 கிலோவாக அதிகரித்தது.

    நேற்று முன்தினம் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.492-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.44 விலை குறைந்தது.

    நேற்று அதிகபட்சமாக ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.448-க்கும், குறைந்தபட்சமாக ரூ.252-க்கும், சராசரியாக ரூ.365.72-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.11 லட்சத்து 67 ஆயிரத்து 812-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×