search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி பூ மார்க்கெட்டில் சாமந்திப்பூ விலை கிலோ ரூ.20 ஆனது
    X

    தருமபுரி பூ மார்க்கெட்டில் சாமந்திப்பூ விலை கிலோ ரூ.20 ஆனது

    • பூக்களை விவசாயிகள் சாலை ஓரங்களிலும், ஆறுகளிலும் கொட்டி வந்தனர்.
    • இன்று மீண்டும் விலை சரிந்தது. சாமந்திப்பூ ஒரு கிலோ ரூ.20-க்கு மட்டுமே விற்பனையானது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, தொப்பூர், சாமிசெட்டிபட்டி, ஜருகு உள்ளிட்ட பகுதிகளி 2345 ஹெக்டர் பரப்பளவில் விவசாயிகள் சாமந்திப்பூக்களை சாகுபடி செய்துள்ளனர்.

    இதனால் தருமபுரி பூ மார்க்கெட்டிற்கு சாமந்தி பூக்கள் குவிய தொடங்கியதால் கடந்த இரண்டு வாரங்களாக சாமந்திப்பூ விலை குறைந்து கிலோ 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனையானது.

    விவசாயிகளுக்கு பூக்கள் பறிக்கும் கூலியே கிடைக்கவில்லை என பூக்களை விவசாயிகள் சாலை ஓரங்களிலும், ஆறுகளிலும் கொட்டி வந்தனர்.

    இந்நிலையில் மார்கழி அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி பூக்களின் விலை உயர்ந்து கிலோ 50 ரூபாய்க்கு விலை போனது.

    இதனை தொடர்ந்து மீண்டும் சாமந்தி பூக்களின் விலை சரிந்து கிலோ 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை ஒட்டி அதிகப்படியான விவசாயிகள் பூ மார்க்கெட்டில் சாமந்தி பூக்களை குவித்தனர். வியாபாரிகளும் பொது மக்களும் நேற்று காலை முதலே பூ மார்க்கெட்டில் குவிந்ததால் சாமந்திப்பூ கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதனால் பூக்களை கொண்டு வந்திருந்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இன்று மீண்டும் விலை சரிந்தது. சாமந்திப்பூ ஒரு கிலோ ரூ.20-க்கு மட்டுமே விற்பனையானது.

    Next Story
    ×