search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை குறைந்தது
    X

    தருமபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை குறைந்தது

    • 4,450 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3,576 கிலோவாக குறைந்தது.
    • மொத்தம் ரூ.15 லட்சத்து 5ஆயிரத்து 850-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

    தருமபுரி,

    தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டு கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 4,450 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3,576 கிலோவாக குறைந்தது. இதேபோல் நேற்று முன்தினம் ரூ.556-க்கு விற்பனையான 1 கிலோ பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.36 விலை குறைந்தது.

    அதன்படி பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.520-க்கும், குறைந்த பட்சமாக ரூ.300-க்கும், சராசரியாக ரூ.421.04-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.15 லட்சத்து 5ஆயிரத்து 850-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

    Next Story
    ×