வீட்டில் புகுந்து நகை திருடி தப்ப முயன்றவர்களை விரட்டி பிடித்த பொதுமக்கள்

வீட்டுக்குள் மர்ம நபர்கள் இருப்பதை அறிந்து கத்தி கூச்சலிட்டார். பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வீட்டில் புகுந்து நகை திருடி தப்ப முயன்றவர்களை விரட்டி பிடித்த பொதுமக்கள்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாதாக்கோட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் சாம் மரியலியானி.

இவரது மனைவி அனிதா தனசீலி (வயது 35 ). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் கதவை பூட்டாமல் அருகே உள்ள வீட்டுக்கு சென்றார்.

இதனை நோட்டமிட்ட 2 பேர் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகைகளை திருடினர்.

அப்போது வந்த அனிதா தனசீலி வீட்டுக்குள் மர்ம நபர்கள் இருப்பதை அறிந்து கத்தி கூச்சலிட்டார்.

உடனடியாக அவர்கள் இரண்டு பேரும் பின் வாசல் வழியாக தப்பி ஓட முயன்றனர்.

உடனடியாக பொதுமக்கள் திரண்டு விரட்டி சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர் .

தர்ம அடி கொடுத்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்தி விசாரணையில் சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தை சேர்ந்த வேடப்பன் (வயது 55), பட்டுக்கோட்டை கீழப்பாளையத்தை சேர்ந்த விஜய் (34) என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து திருடி தப்பி ஓட முயன்ற வேடப்பன், விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காயம் அடைந்த வேடப்பனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com