search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் பொருட்கள் கொள்ளை
    X

    ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் பொருட்கள் கொள்ளை

    • கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    • சொந்த பணியின் காரணமாக ஆனைகட்டி சென்றார்.

    கோவை

    கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அபுமோகராஜ் (வயது 34). இவர் கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் இளங்கோ நகரில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.

    அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த பணியின் காரணமாக ஆனைகட்டி சென்றார். இதனால் ஸ்டூடியோவில் வேலை செய்து வரும் ஸ்டிபன்ராஜ் என்பவர் கடையை கவனித்து வந்தார்.சம்பவத்தன்று வழக்கம் போல ஸ்டிபன்ராஜ் ஸ்டூடி யோவில் வேலைகளை முடித்து விட்டு கடையை பூட்டி சென்றார். மறுநாள் காலை ஸ்டூடியோவில் திறக்க அவர் சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான கம்பீயூட்டர் உள்பட பல பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து அவர் அபுமோகராஜூக்கு தகவல் தெரிவித்தார்.அவர் உடனே கோவை திரும்பினார். பின்னர் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.இதையடுத்து அபுமோகராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×