search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.75ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
    X

    சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.75ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

    • சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.75ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
    • ஒயிட் சிமெண்ட் தரக்குறைவாகவும், கலப்படம் நிறைந்ததாகவும் இருந்துள்ளது

    பெரம்பலூர்:சேவைகுறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என சிமெண்ட் ஏஜென்சீசுக்கு பெரம்பலூர் நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.பெரம்பலூர் நிர்மலா நகரை சேர்ந்தவர் குலாம் மொய்தீன் மகன் முகமது சபீக் (வயது 38). இவர் புதிதாக கட்டிடம் கட்டியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம்தேதி கட்டிடத்திற்கு பூச்சு மற்றும் பட்டி பார்ப்பதற்காக பெரம்பலூர் பழைய ஆர்டிஓ அலுவலகம் எதிரில் உள்ள ஒரு ஏஜென்சியில் 35 மூட்டை ஒயிட் சிமெண்ட் வாங்கியுள்ளார். அந்த ஒயிட் சிமெண்டை பயன்படுத்தியபோது கட்டிட சுவற்றில் ஒட்டாத சாதாரண சுண்ணாம்பு போல் இருந்துள்ளது. அந்த ஒயிட் சிமெண்ட் தரக்குறைவாகவும், கலப்படம் நிறைந்ததாகவும் இருந்துள்ளது.இதையடுத்து முகமது சபீக் விக்னேஷ் ஏஜென்சீசுக்கு சென்று அதன உரிமையாளரிடம் ஓயிட் சிமெண்ட் தரமற்றதாகவும், கலப்படம் உள்ளதால் தான் சுவற்றில் ஒட்டவில்லையே என கேட்டதற்கு அவர் நான் சென்னை, சைதாபேட்டையில் உள்ள அல்டிரா டெக் சிமெண்ட் லிமிடெட் மேலாளரிடம் இருந்து தான் ஓயிட் சிமெண்ட் ஏஜென்சீஸ் எடுத்து விற்பனை செய்து வருகிறேன் எனவும், அங்கிருந்து வந்ததை தான் நான் உங்களுக்கு விற்பனை செய்தேன் என கூறியுள்ளார்.பின்னர் முகமது சபீக் வேறு கடையில் ஓய்ட் சிமெண்ட் வாங்கி கட்டித்திற்கு பயன்படுத்தியுள்ளார்.இதனால் மனஉளைச்சல் அடைந்த முகமது சபீக் சேவை குறைபாடு புரிந்தற்காக ரூ. 4 லட்சம் நஷ்ட ஈடும், வழக்கு செலவு தொகையும் வழங்க கோரி கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம்தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் ஜவஹர், உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் அளித்த தீர்ப்பில், விக்னேஷ் ஏஜென்சீஸ் உரிமையாளர் சேவை குறைபாடு புரிந்தால் பாதிக்கப்பட்ட முகமது சபீக்கு ரூ.75 ஆயிரம் நஷ்ட ஈடும், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.85 ஆயிரம் வழங்கவேண்டும் எனவும், பெரம்பலூர் ஏஜென்சீஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×