search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவன் நீரில் மூழ்கி சாவு
    X

    சிறுவன் நீரில் மூழ்கி சாவு

    • நீச்சல் தெரியாத கிஷோர் கிணற்றின் கரையோரம் நின்று குளித்து கொண்டிருந்தார்.
    • திடீரென்று அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலத்தை அடுத்த பிக்கனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் கிஷோர் (வயது17). இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது நீச்சல் தெரியாத கிஷோர் கிணற்றின் கரையோரம் நின்று குளித்து கொண்டிருந்தார்.

    திடீரென்று அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே நண்பர்கள் இந்த சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து மகேஷ் மகேந்திரமங்கலம் போலீசாருக்கும், பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து கிணற்றில் மூழ்கிய கிஷோரின் உடலை மீட்டனர். பின்னர் கிஷோரின் உடலை போலீசார் கைப்பற்றி தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×