search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
    X

    பயிற்சி முகாம் நடந்தது.

    ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

    • பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன விரிவுரையாளர் இளையராணி பார்வையிட்டார்.
    • வருகிற 10-ந் தேதி வரை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை மற்றும் ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் மூலமாக 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற பயிற்சி தொடங்கியது.

    இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்று பாடங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன விரிவுரையாளர் இளையராணி பார்வையிட்டார்.

    இதற்கான ஏற்பாடுகளை ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் கனகா, மதுக்கூர் வட்டார கல்வி அலுவலர் மனோகரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தங்கம் ஆகியோர் ஒருங்கிணைத்து செய்திருந்தனர். வருகிற 10-ந் தேதி வரை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

    Next Story
    ×