

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடந்து வந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கொரோனா பரவல் காரணமாக மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடை விதிக்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது மனுக்களை
https://cmhelpline.tnega.org/portal/en/home என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.
மேலும் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல்
2 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலும் மனுக்களை அளிக்கலாம்.
பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் பெறும் தேதி
பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.