

சுவாமிலை:
கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமானில் உலகப் புகழ் பெற்ற சக்தி ஸ்தலமாக விளங்கக்கூடிய சீதளாதேவி என்கிற மகா மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
மகா மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா காலை சக்தி வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை வீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்