search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வாங்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வாங்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு

    • மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
    • மூன்று சக்கர சைக்கிள், காதொலிக் கருவி, கண் கண்ணாடி, செயற்கை கால் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வாங்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    பேராவூரணி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் இருந்த போது அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    அதன் பிறகு வந்த அ.தி.மு.க ஆட்சியில் இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் எம்.எல்.ஏ.-க்கள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள், பேராவூரணி தொகுதி அசோக்குமார் எம்.எல்.ஏ.-வை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதையேற்று அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், காதொலிக் கருவி, கண் கண்ணாடி, செயற்கை கால் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வாங்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    இதையடுத்து நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்டதலைவர் பகாத் அகமது,மாவட்ட பொருளாளர்சுதாகர், மாவட்ட ஒருங்கி ணை ப்பாளர் பாலசுப்பி ரமணியன், மாவட்ட மகளிர் அணி தலைவர் ரேவதி, பேராவூரணி ஒன்றிய தலைவர் வெங்கடேசன், ஒன்றிய துணை தலைவர் ராஜேஷ்கண்ணன் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அசோக்குமார் எம்.எல்.ஏ -வை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×