வல்லத்தில் 7 பேரை கடித்த வெறிநாய்

வல்லத்தில் வெறிநாய் கடித்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பேரூராட்சியில் அதிகளவில் நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகனங்களில் வருபவர்கள், பொதுமக்கள் மிகவும் அச்சத்துடனே இருந்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று வல்லம் கீரைக்கார தெரு- இரட்டை அக்ரஹாரம் சந்திப்பில் அதிக அளவில் நாய்கள் சுற்றித் திரிந்தன.

அதில் வெறிநாய் ஒன்று அப்பகுதியை சேர்ந்த 7 பேரை துரத்தி கடித்துள்ளது. அதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வல்லம் பகுதியில் அதிகளவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் 

என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com