search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
    X

    சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத சண்முகசாமி அருள்பாலிப்பு.

    சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்

    • சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • நாளை 5-ம்தேதி சாமி மலைக்கோவிலுக்கு திரும்ப உள்ளது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். இங்கு அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமைந்த கட்டு மலைக்கோயிலாகும். இத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் முருக பக்தர்களுக்கு 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிகட்டுகளாக இருந்து சேவை செய்வதாக ஐதீகம். மேலும் இத்தலத்தில் தான் முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை, குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்பதும் வரலாறு எனவே இத்தலத்தில் முருகப்பெருமான் சுவாமியே நீ என்றும் சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார். இத்தகைய சிறப்பு பெற்ற நான்காம் படைவீடான சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா ஜனவரி 26 கொடியேற்றத்துடன் துவங்கியது.

    வள்ளி தெய்வானை சமேத சண்முகசுவாமி சிறப்புமலர் அலங்காரத்தில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்–வரருடன் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேலுடன் கூடிய யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கும் கோபுர ஆர்த்தி செய்யப்பட்டது,

    இதனை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

    கடந்த ஜனவரி 30-ம் தேதி இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நடைபெற்றது தைப்பூச அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இன்று 4-ம் தேதி காலை 11 மணியளவில் காவிரியில் தீர்த்தவாரி நடைபெற்றது பின்னர் இரவு கொடிஇறக்கம் செய்யப்பட்டு, 5-ம் தேதி சுவாமி மலைக்கோயிலுக்கு திரும்ப உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் உபய தாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    Next Story
    ×