பா.ஜனதா சார்பில் தென்காசி கோவில் தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்தும் பணி

தெப்பக்குளம் பகுதிகளில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.தூய்மை பணியில் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
பா.ஜனதா சார்பில் தென்காசி கோவில் தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்தும் பணி
Published on

தென்காசி:

தென்காசி நகர பாரதீய ஜனதா கட்சி சார்பில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றி புதிய மரக்கன்றுகளை நட்டு தூய்மை பாரத நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி நகர பாரதீய ஜனதா கட்சி தலைவர் மந்திரமூர்த்தி தலைமையில் தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜேஷ் ராஜா முன்னிலையில் மாவட்ட பொதுச் செயலாளர் ராமநாதன் சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராஜ குலசேகர பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர்கள் முத்துக்குமார், முத்துலட்சுமி, நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கருப்பசாமி, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் செந்தூர் பாண்டியன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், இளைஞரணி மாவட்டத் துணைத் தலைவர் விவேக்குமார், இளைஞர் அணி நகர தலைவர் வைரம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், நகர பொதுச்செயலாளர் யோகா சேகர், நகர பொருளாளர் நாகராஜ், நகர துணைத் தலைவர் மாரியப்பன், நகரச் செயலாளர் விஸ்வநாதன், நகரத் துணைத் தலைவி மகேஸ்வரி, சமூக ஆர்வலர் நவநீத கிருஷ்ணராஜா, ராணுவ பிரிவு மாவட்ட துணை தலைவர் சுரேஷ், நகர தலைவர் கண்ணபிரான், ராணுவ பிரிவு லட்சுமணன் அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் கணபதி, கிளைத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com