ஆழ்வார்குறிச்சியில் மரநாய் மீட்பு

ஆழ்வார்குறிச்சியில் பகுதியில் மரநாய் மற்றும் நல்லபாம்பு ஆகியவற்றை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
ஆழ்வார்குறிச்சி பகுதியில் பிடிபட்ட மரநாய்.
ஆழ்வார்குறிச்சி பகுதியில் பிடிபட்ட மரநாய்.
Published on

கடையம்:

ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி பகுதியில் மரநாய் ஒன்று சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின்படி, அப்பதிக்கு வனத்துறையினர் சென்று மர நாயைமீட்டனர். மேலும் பங்களா குடியிருப்பு ராமர் கோவிலை சேர்ந்த முருகன் என்பவருடைய வீட்டில் நல்ல பாம்பு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின்படி, வனத்துறையினர் உடனடியாக சென்று நல்ல பாம்பை பிடித்தனர்.

 மேலும் ஆழ்வார்குறிச்சி செட்டிகுளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முப்பிடாதி என்பவருடைய வீட்டில் உடும்பு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடும்பை பத்திரமாக மீட்டனர் .

மீட்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின்படி அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com