செங்கோட்டை கோவிலில் தைப்பூச திருவிழா

செங்கோட்டை ஸ்ரீதர்மசம் வர்த்தினி அம்பாள் ஸமேத ஸ்ரீ குலசேகர நாதசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நடந்து வருகிறது. கொரேனா காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
பூஜை நடந்த போது எடுத்த படம்
பூஜை நடந்த போது எடுத்த படம்
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை ஸ்ரீதர்மசம் வர்த்தினி அம்பாள் ஸமேத ஸ்ரீ குலசேகர நாதசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா வானது கடந்த 9&ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், இரவில் சுவாமி அம்பாள் சப்பரத்தில் வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

7&ம் திருநாள் விழாவில் சுவாமி அம்பாள் அலங்கரிக்கபட்ட கோ ரதத்தில் வீதியுலா விழாவானது கொரோனா தொற்று பரவல் காரணமாக எளிமையான முறையில் நடைபெற்றது.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபட்டதால்  பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com