சாம்பவர் வடகரையில் கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

சாம்பவர்வடகரையில் கிணற்றில் விழுந்த மயில் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட மயில்
மீட்கப்பட்ட மயில்
Published on

சாம்பவர்வடகரை:

கடையநல்லூர் தாலுகா சாம்பவர்வடகரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சாம்பவர்வடகரை துணை மின் நிலையம் கீழ்புறம் உள்ள விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து தத்தளித்தது.

இதுகுறித்து சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன் சுரண்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வம், நிலைய போக்குவரத்து அலுவலர் பாலச்சந்தர், சிறப்பு நிலை அலுவலர் ரவீந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சாமி, நான்முக ராஜன், சமுத்திர பாண்டி ஆகியோர் கிணற்றில் தவறி விழுந்த மயிலை உயிருடன் மீட்டு அருகில் உள்ள காட்டில் விட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com