

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் போட்டியிடும் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலின்படி சம்மந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்கு பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் பொருத்தும் பணி வட்டார தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது என மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.