

தென்காசி:
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.