search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    75 நாட்கள் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
    X

    கலெக்டர் ஆகாஷ்.


    75 நாட்கள் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    • கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது.
    • தென்காசி, பூஸ்டர், தடுப்பூசி, கலெக்டர், வேண்டுகோள்

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் 18 வயது முதல் 59 வயது வரையுள்ளோருக்கான முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போடும்பணி கடந்த 15-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு அரசு தடுப்பூசி மையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கால கொண்டாட்டத்தை முன்னிட்டு 75 நாட்கள் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இன்றளவும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

    எனவே இரண்டாவது தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவுபெற்ற 18 வயது முதல் 59 வரையிலானவர்கள் தங்களுக்கு அருகாமையில் இருக்கும் அரசு தடுப்பூசி மையங்களுக்கு சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக போட்டுக்கொண்டு, கொரோனா தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்து கொண்டு மாவட்டத்திற்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×