search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்ட பா.ஜ.க. மகளிர் அணி செயற்குழு கூட்டம்
    X

    செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

    தென்காசி மாவட்ட பா.ஜ.க. மகளிர் அணி செயற்குழு கூட்டம்

    • செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி மகாலட்சுமி தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தென்காசி:

    தென்காசியில் பா.ஜ.க. மாவட்ட மகளிர் அணி செயற்குழு கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி தலைவி மகாலட்சுமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அனிதா செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வரவேற்றார்.

    இதில் மாநில மகளிர் அணி செயலாளர் மற்றும் பொதுச் செயலாளர் நெல்லையம்மாள், தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன், ராமநாதன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவி வக்கீல் முத்துலட்சுமி, மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி, முத்துலட்சுமி, மாவட்டத் துணைத்தலைவர் ராஜா லெட்சுமி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் வளர்மதி, ராஜலெட்சுமி சுந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், தென்காசி மாவட்ட அரசு மருத்துவ மனைகளில் பிரசவத்திற்கு வரும் தாய்மார்களிடம் மருந்து பற்றாக்குறை என கூறி வெளியில் இருந்து மருந்து வாங்கி வரக் கூறும் நிலையை அரசு போக்க வேண்டும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை தலைமையில் தென்காசி மாவட்டத்தில் பொதுக் கூட்டம் நடத்துவது எனவும், மாவட்ட மகளிர் அணி சார்பில் 5 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    Next Story
    ×