search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் நாளை மறுநாள் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் - மாவட்ட செயலாளர்கள் அறிக்கை
    X

    சங்கரன்கோவிலில் நாளை மறுநாள் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் - மாவட்ட செயலாளர்கள் அறிக்கை

    • ஒருங்கிணைந்த தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் சங்கரன்கோவில் நடைபெற உள்ளது.
    • கூட்டத்திற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:-

    தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒருங்கிணைந்த தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற உள்ளது.

    கூட்டத்திற்கு வரு வாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் டிசம்பர் 5-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி வேல்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெறும் அரசு விழா வில் கலந்து கொள்ள வருகிறார். அந்த விழாவினை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோ சனைகள் நடைபெற உள்ளது.

    எனவே இந்த கூட்டத்தில் தலைமை நிலைய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பிற அணி அமைப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×