

தென்காசி:
தென்காசி நகர பாரதீய ஜனதா கட்சி சார்பாக மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் நகர தலைவர் மந்திரமூர்த்தி முன்னிலையில் தியாகி இம்மானுவேல் சேகரன் 65- வது குருபூஜை விழாவையொட்டி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் ராமநாதன், மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், நகர பொதுச்செயலாளர்கள் ராஜ்குமார்,சேகர் நகர துணைத் தலைவர்கள் கருப்பசாமி,சந்திரன் நாகராஜ், நகர செயலாளர் சுடலைராஜ் ராமானுஜம் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கருப்பசாமி, அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் குத்தாலிங்கம், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன், ஆன்மீக மேம்பாட்டு பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், விவசாய அணி நகர தலைவர் திருநாமம், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு நகர தலைவர் ஜெய் கணேஷ், ஆன்மிக மேம்பாட்டு பிரிவு நகர தலைவர் முத்துராஜ், முன்னாள் நகரச் செயலாளர் செல்வி, கிளை தலைவர்கள் முப்புடாதி, கார்த்திக், முத்து நாராயணன், பாலசுப்பிரமணியன், பாபு இசக்கிராஜ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.