search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீஞ்சூர் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளை
    X

    மீஞ்சூர் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளை

    • மேட்டுப்பாளையம் அருகில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் இருந்த உண்டியலையும் கொள்ளை கும்பல் உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர்.
    • மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் கோயில்களில் தொடர்ந்து கொள்ளை நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த மேட்டுப்பாளையம் பொன்னேரி- மீஞ்சூர் சாலையில் ஜோதி சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர்.

    காலையில் பக்தர்கள் வந்தபோது கோயில் முன்பு இருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளைபோய் இருந்தது. நள்ளிரவில் வந்த மர்மகும்பல் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். உண்டியலில் ரூ. 10 ஆயிரத்துக்கும் மேல் இருந்ததாக தெரிகிறது.

    மேட்டுப்பாளையம் அருகில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் இருந்த உண்டியலையும் கொள்ளை கும்பல் உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர். அடுத்தடுத்து 2 கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் கோயில்களில் தொடர்ந்து கொள்ளை நடந்து வருகிறது. வழிப்பறி சம்பவங்களும் நடக்கிறது. இதனை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×