search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி: 3 பேருக்கு தீவிர சிகிச்சை
    X

    திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி: 3 பேருக்கு தீவிர சிகிச்சை

    • ஸ்ரீகாந்த் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • 3 பேருக்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரெட்டணை அய்யனாரப்பன் கோயில் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்(23) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் படுகாயமடைந்த பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த அருள் ரஜினி, நவீன் மற்றும் நாகந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுகுமார் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து பெரிய தச்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ேபாலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 4 பேரும் மது அருந்தி இருந்ததும் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விபத்தில் பலியான ஸ்ரீ காந்த்திற்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. ஸ்ரீகாந்தின் குழந்தைக்கு வருகிற 28-ந் தேதி முதல் பிறந்தநாள் கொண்டாட இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×