search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில்நுட்ப கோளாறு- வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
    X

    தொழில்நுட்ப கோளாறு- வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

    • அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது.
    • இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மீஞ்சூர்:

    அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட், இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் 2-வது நிலையில் உள்ள 2வது அலகில் செயல்பட்ட கொதிகலனில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அந்த அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    Next Story
    ×