என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயிற்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
களக்காடு கல்லூரியில் கற்றல் கற்பித்தல் பயிற்சி
- களக்காடு கடம்போடுவாழ்வு செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் பயிற்சி நடைபெற்றது.
- இந்த பயிற்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
களக்காடு:
களக்காடு கடம்போடுவாழ்வு செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு 16 வாரங்கள், களக்காடு, இடையன்குளம், திருக்குறுங்குடி, ஏர்வாடி, நாங்குநேரி கரந்தாநேரி, பத்மநேரி, டோனாவூர், தளபதி சமுத்திரம், திருவேங்கடநாதபுரம் பள்ளிகள் கற்றல் கற்பித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை கல்லூரியின் தலைவர் தமிழ்செல்வன் மாணவர்களுக்கு வழங்கினார்.
இதில் கல்லூரி முதல்வர் டாக்டர் குமரேசன், பேராசிரியர்கள் பலவேச கிருஷ்ணன், கபிரியல்ராஜ், ரமேஷ், மாரியப்பன், ராதிகா, பத்ரகாளி, ஜமிலா பானு, ரெக்சி, அனிதா, கல்லூரி பணியாளர்கள் கலைசெல்வி, சுகன்யா, ரேக்கா, கெளரி உள்பட பலர் கலந்து கொண்டனர்,
Next Story