search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாரதா கல்லூரியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்
    X

    விழாவில் பேசிய மாணவிகளை படத்தில் காணலாம்.

    சாரதா கல்லூரியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

    • ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அன்றைய வரலாற்றின் முக்கியத்துவத்தை கண்டறிந்து ஒருங்கிணைந்த செயல்முறையாக கற்பித்தல் மற்றும் கற்றல் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
    • ஆசிரியர்களுக்கு அதிர்ஷ்ட விளையாட்டு நடத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை அரியகுளம் சாரதா மகளிர் தன்னாட்சி கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் மாணவர் பேரவை இவ்விழாவினை ஏற்பாடு செய்திருந்தது.

    மாணவர் பேரவையின் மாணவியத்தலைவி ரங்க ப்ரியங்கா வரவேற்று பேசினார். கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவப்பிரியா அம்பா ஆசிரியர்களின் பழமையான, நிகழ்கால மற்றும் எதிர்கால சூழல் விழுமியங்களை மேற்கோள் காட்டி அனைவருக்கும் ஆசி வழங்கினார்.

    கல்லூரி முதல்வர் கமலா தொடக்க உரையாற்றினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அன்றைய வரலாற்றின் முக்கியத்துவத்தை கண்டறிந்து ஒருங்கிணைந்த செயல்முறையாக கற்பித்தல் மற்றும் கற்றல் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

    ஆசிரியர்களுக்கு அதிர்ஷ்ட விளையாட்டு நடத்தப்பட்டது.

    நிறுவனத்தின் இயக்குனர் பங்கேற்பாளர்களை வாழ்த்தி மாணவர்கள் மற்றும் அறிஞர்களை சமூக பொறுப்புணர்வோடு கல்வி, ஆராய்ச்சி, புதுமை மற்றும் விரிவாக்கம் பயிற்சிக்கு மாற்றும் பணியில் ஆசிரியர்களின் தற்போதைய பங்களிப்பை சிறப்பித்து அனைத்து ஆசிரியர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

    Next Story
    ×