என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் பணியாளர் அர்ச்சுனன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
- பள்ளத்தூர் டாஸ்மாக் கடை விற்பனையாளர் அர்ச்சுனன் படுகொலை செய்யப்பட்டார்.
- அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தஞ்சை ரெயிலடியில் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் டாஸ்மாக் கடையில் விற்பனை யாளராக பணிபுரிந்த அர்ச்சுனன் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்ப ட்டார்.
அவரது படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று தஞ்சை மாவட்ட டாஸ்மாக் அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ரெயிலடியில் நடைபெற்றது.
டாஸ்மாக் தொ.மு.ச சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
பின்னர் அர்ச்சுனன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் தமிழ்நாடு முழுவதும் பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
அவர்களது பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும். பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதில் அனைத்து சங்க நிர்வாகிகள் ஜெமினி, ரங்கராஜ், சக்திவேல், சுரேஷ், ரமேஷ், சரவணன், பாலசுப்பிரமணியன், ராஜசேகர், மில்டன், துரை ரமேஷ், பாக்யராஜ், ரங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






