search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுதந்திர தின நாளில்  டாஸ்மாக் கடைகள் மூடல்
    X

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுதந்திர தின நாளில் டாஸ்மாக் கடைகள் மூடல்

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுதந்திர தின நாளில் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் அறிவித்துள்ளார்.
    • மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    வருகின்ற 15 - ந்தேதி (திங்கள்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 15-ந்தேதி ஒரு நாள் மட்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் இயங்காது என அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×