search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்பனை: திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்டு
    X

    அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்பனை: திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்டு

    • கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • திருப்பூர், பல்லடம் ரோடு நொச்சிபாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் பார்கள் செயல்படுவதாகவும், அனுமதித்த நேரத்தை விட கூடுதல் நேரம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு புகார்கள் வந்தன.

    இந்த புகாரின் அடிப்படையில் கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 18-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் அனுமதி இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. உடனடியாக அந்த பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் திருப்பூர், பல்லடம் ரோடு நொச்சிபாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறியதுடன், பாருக்குள் மதுவிற்பனை செய்ததாக புகார் எழுந்தது. சோதனையில் அது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து கடை விற்பனையாளர்கள் சண்முகநாதன், குமார், பாலசுப்ரமணியம், கார்த்திகேயன், காமராஜ், முருகானந்தம் ஆகியோரை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சுப்ரமணியம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×