search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்ற வாலிபர் கைது
    X

    ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்ற வாலிபர் கைது

    • மாணவியின் தந்தை அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவந்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் தற்போது தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறி சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாணவியின் தந்தை அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் நெருப்பூர் பகுதியில் ஒரு வாலிபருடன் மாயமான மாணவி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் மீட்டு அந்தியூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது அந்தியூர் அருகே உள்ள சொக்கநாதமலையூரை சேர்ந்த நல்லசாமி (23) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் நல்லசாமியை கைது செய்தனர். மேலும் அவரை பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×