search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரவாயலில் 6 டன் ரேசன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது
    X

    மதுரவாயலில் 6 டன் ரேசன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

    • பதுக்கி வைத்து இருந்த 6டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    சென்னை மதுரவாயல், பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை டி.எஸ்.பி சம்பத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது மதுரவாயல் மேம்பாலம் அருகே உள்ள இடத்தில் பதுக்கி வைத்து இருந்த 6டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சதிஷ் குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

    சதிஷ்குமார் ஏற்கனவே பலமுறை ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அவருக்கு இவ்வளவு ரேசன் அரிசி கிடைத்தது எப்படி? ரேசன் கடை ஊழியர்கள் உடந்தையா? யாருக்கு கடத்தப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×