search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரம் அருகே காதலனுடன் தங்கி இருந்த இளம்பெண் தற்கொலை
    X

    தாம்பரம் அருகே காதலனுடன் தங்கி இருந்த இளம்பெண் தற்கொலை

    • கடந்த 3 மாதங்களாக சதீஷ்குமாருடன் ஐஸ்வர்யா ஒரே வீட்டில் தங்கி இருந்தார்.
    • ஐஸ்வர்யாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த மகாலட்சுமி நகர், முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் சதீஷ் குமார். தனியார் சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி, 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் திருச்சியை சேர்ந்த ஐஸ்வர்யா (வயது22) என்பவரும் காதலித்து வந்தனர்.

    அவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். மேலும் அவர்களது திருமணத்தை விரைவில் நடத்தவும் முடிவு செய்து இருந்தனர்.

    இதற்கிடையே கடந்த 3 மாதங்களாக சதீஷ்குமாருடன் ஐஸ்வர்யா ஒரே வீட்டில் தங்கி இருந்தார். நேற்று இரவு வெளியில் சென்று இருந்த சதீஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு ஐஸ்வர்யா பேசியபோது திடீரென இணைப்பை துண்டித்து விட்டார். அப்போது அவர் மன உளைச்சலில் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் சந்தேகமடைந்த சதீஷ்குமார் அதே பகுதியில் வசிக்கும் தனது தங்கையிடம் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினார். சதீஷ்குமாரின் தங்கை வந்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சென்றனர்.

    அங்கு ஐஸ்வர்யா புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சேலையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஐஸ்வர்யாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இது தொடர்பாக சதீஷ்குமாரிடம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×