search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய 3 பேர் கேரளாவில் கைது
    X

    காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய 3 பேர் கேரளாவில் கைது

    • சுமிகாவை அவரது பெற்றோர் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று இருப்பதாக தகவல் கிடைத்தது.
    • தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்தனர். அவர்கள் சுமிகாவையும், அவரது பெற்றோரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்கநாராயணபுரத்தைச் சேர்ந்த தங்கராஜா மகன் முருகன் (வயது 24). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகேசன்-பத்மா தம்பதியரின் மகள் சுமிகா (19). முருகன், சுமிகா கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு சுமிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மாதம் 18-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    இதையடுத்து முருகன், சுமிகா ஆகியோர் கூடங்குளத்தில் வீடு எடுத்து தங்கியிருந்து வந்தனர். சம்பவத்தன்று இரவு அவர்கள் ஸ்ரீரெங்கநாராயணபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்தனர். இதை அறிந்த சுமிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து சுமிகாவை தாக்கி காரில் ஏற்றி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து முருகன் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சுமிகாவின் உறவினரான ஸ்ரீரெங்கநாராயணபுரத்தை சேர்ந்த அமுதா, அனுசுயா, பாப்பா, தங்கம்மாள் உள்பட 5 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிலர் கன்னியாகுமரிக்கு தப்பிச் சென்றதாக கிடைத்த தகவலின் பேரில் கூடங்குளம் போலீசார் அங்கு சென்றனர். அப்போது, அங்கிருந்த செல்வகுமார், விஜயகுமார், வைகுண்ட மணி ஆகியோரை கைது செய்தனர். ஆனால் அங்கு சுமிகா, அவரது பெற்றோர் இல்லாததால் அவர்கள் எங்கே சென்றார்கள்? என்பது குறித்து தெரியவில்லை.

    சுமிகாவை அவரது பெற்றோர் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று இருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்தனர். அவர்கள் சுமிகாவையும், அவரது பெற்றோரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில், சுமிகாவை கடத்தியது தொடர்பாக பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாலராமபுரத்தில் பதுங்கி இருந்த சுமிகா தாய் பத்மா, தந்தை முருகேசன், சித்தி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    Next Story
    ×