search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் திருமணம் செய்து கொண்டு தலைமறைவான கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா
    X

    காதல் திருமணம் செய்து கொண்டு தலைமறைவான கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா

    • மனைவி சரண்யாவுடன் 2 நாட்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில் அரிதாஸ் வெளியூருக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார்.
    • தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சரண்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் வட்டம் சாத்துக்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா (வயது22). பி.ஏ. பட்டதாரி. இவர் அதே ஊரை சேர்ந்த தனாதிபதி மகன் அரிதாஸ்(24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

    இருவரும் காதலித்து வந்த நிலையில், அரிதாஸ் சரண்யாவிடம் ஆசை வார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த சரண்யா தம்மை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு அரிதாசை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சம்மதிக்காத அரிதாஸ், பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என காலம் கடத்தியுள்ளார்.

    திருமணத்திற்கு தொடர்ந்து சரண்யா வற்புறுத்தி வந்த நிலையில், 5 மாதம் கர்ப்பமடைந்திருந்த சரண்யாவை தொழுதூர் அடுத்த கழுதூரில் உள்ள மருந்து கடைக்கு அழைத்துச் சென்று சத்து மாத்திரை என பொய் கூறி கர்ப்பத்தை கலைப்பதற்கான மாத்திரையை அரிதாஸ்கொடுத்துள்ளார். இதனால் சரண்யாவின் கர்ப்பம் கலைந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந் தேதி விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் அரிதாஸ் மீது புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்ததையடுத்து, அரிதாசுக்கும் சரண்யாவுக்கும் 11.07.2021 அன்று சாத்துக்குடல் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் மனைவி சரண்யாவுடன் 2 நாட்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில் அரிதாஸ் வெளியூருக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். வெளியூர் சென்ற கணவன் நீண்ட நாட்களாக திரும்பி வராதது குறித்து அரிதாசின் பெற்றோரிடம் சரண்யா கேட்டபோது மாமனார் தனாதிபதியும் மாமியார் தமிழரசியும் அவரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர். மேலும் சரண்யாவை வீட்டை விட்டு வெளியே துரத்தி உள்ளனர்.

    இதனையடுத்து கணவரை தேடி பல இடங்களில் அலைந்த சரண்யா இன்று அரிதாசின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து சரண்யா கூறுகையில்,

    தன்னை காதலித்து கர்ப்பமாகி விட்டு திருமணம் செய்து விட்டு தலைமறைவான அரிதாஸ் உடன் தன்னை சேர்த்து வைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தனது கணவருடன் சேர்த்து வைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர போவதில்லை எனவும் கூறினார். மேலும் தன்னை தாக்கிய மாமனார் தனாதிபதி மற்றும் மாமியார் தமிழரசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சரண்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×