search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்காதலியை கணவர் மீட்டு சென்றதால் தொழிலாளி தற்கொலை
    X

    கள்ளக்காதலியை கணவர் மீட்டு சென்றதால் தொழிலாளி தற்கொலை

    • கள்ளக்காதலி அவரது கணவருடன் சென்றதால் முரளி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
    • சம்பவத்தன்று வீட்டில் இருந்த முரளி வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் முரளி (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கும் சூரியகலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார்.

    திருமணமான 6 வருடங்களுக்கு பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து 2 பேரும் பிரிந்தனர்.

    அதன் பின்னர் முரளிக்கு நிஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் 8 ஆண்டுகளாக வசித்து வந்தனர். அதன் பின்னர் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நிஷா முரளியை பிரிந்து சென்றார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முரளிக்கு திருமணமான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் இளம்பெண்ணின் வீட்டிற்கு செல்லும் முரளி அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இது குறித்து இளம்பெண் தனது கள்ளக்காதலன் முரளியிடம் கூறினார். எனவே 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறுவது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்தனர். பின்னர் கணவன்-மனைவி என கூறி துடியலூர் அருகே உள்ள நல்லாம்பாளையத்தில் வீட்டு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.

    இந்தநிலையில் இளம்பெண்ணின் கணவர் தனது மனைவியை காணவில்லை என மதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர். இளம்பெண் கோவையில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை மீட்டு அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.

    தனது கள்ளக்காதலி அவரது கணவருடன் சென்றதால் முரளி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×