search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்தணி அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்
    X

    திருத்தணி அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்

    • மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும். அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பெண்கள் தெரிவித்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள காசிநாதபுரம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடை, குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும். அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பெண்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருத்தணி தாசில்தார் வெண்ணிலா தெரிவித்தார். மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அனுமதி வந்தவுடன் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாகவும், அதுவரை மதுக்கடையை மூடவும் உத்தவிட்டார்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×