

பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சின்ன வேன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமாரி. இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர் குமாரி அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டான்.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.