என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆண்டிபட்டி அருகே விபத்தில் பெண்ணின் கை துண்டானது
- வேனில் கையை வெளியே வைத்தபடி வந்ததால் வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற டிராக்டர் எதிர்பாராதவிதமாக பிரியாவின் கையில் உரசியது.
- உடனடியாக அருகில் இருந்தவர்கள் பிரியாவை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரியா (வயது 30). இவர் கண்டமனூர் அருகே உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக வேனில் வந்தார்.
பின்னர் மீண்டும் தனது ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். வேனில் கையை வெளியே வைத்தபடி வந்ததால் அந்த வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற டிராக்டர் எதிர்பாராதவிதமாக பிரியாவின் கையில் உரசியது.
இதில் அவரது வலது கை துண்டாகி கீழே விழுந்தது. இதனால் அவர் வலியில் அலறி துடித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் பிரியாவை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை பிடித்து கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசேஷத்துக்கு சென்ற போது நடந்த விபத்தில் பெண்ணின் கை துண்டானது உறவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்