

புதுவை கவர்னர் தமிழிசை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடினர்.
அப்போது கவர்னர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற மூதாட்டி மயக்கமடைந்து சாலையில் விழுந்தார். இதனையறிந்த டாக்டரான கவர்னர் தமிழிசை உடனடியாக வந்து அந்தப் பெண்ணுக்கு முதலுதவி அளித்தார்.
பின்னர் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து மூதாட்டியை ஏற்றி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
கவர்னர் தமிழிசையின் உதவிக்கு அங்கிருந்தவர்கள் நன்றி தெரிவித்து அவரது செயலையும் பாராட்டினர்.